/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 447 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 447 மனுக்கள் ஏற்பு
ADDED : மார் 10, 2025 11:57 PM
திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 447 மனுக்கள் ஏற்கப்பட்டது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்றுநடந்தது.
கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 85, சமூக பாதுகாப்பு திட்டம் 78, வேலைவாய்ப்பு வேண்டி 67, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் கோரி 90, இதர துறை 127 என, மொத்தம்447 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், தனித்துணை கலெக்டர் பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் - திருவள்ளூர், தீபா - திருத்தணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.