/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஞ்சரான வடமங்கலம் நெடுஞ்சாலை; வயலுார் பகுதிவாசிகள் கடும் அவதி
/
பஞ்சரான வடமங்கலம் நெடுஞ்சாலை; வயலுார் பகுதிவாசிகள் கடும் அவதி
பஞ்சரான வடமங்கலம் நெடுஞ்சாலை; வயலுார் பகுதிவாசிகள் கடும் அவதி
பஞ்சரான வடமங்கலம் நெடுஞ்சாலை; வயலுார் பகுதிவாசிகள் கடும் அவதி
ADDED : ஆக 13, 2024 09:06 PM

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி யிலிருந்து வயலுார் வழியாக, வடமங்கலம்செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இதில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஆங்காங்கே சேத மடைந்து மெகா பள்ளங்களாக மாறியுள்ளன.
இதனால் இவ்வழியே செல்லும் பகுதிவாசிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சேலை மிகவும்சேதமடைந்து பரிதாபமான நிலையில் உள்ளதால் அவ சரத்திற்கு ஆம்புலன்ஸ் வருவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில்வருவோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்க வில்லை என, பகுதியினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.