sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புட்லுார்- அரண்வாயல் சாலை சேதம் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

/

புட்லுார்- அரண்வாயல் சாலை சேதம் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

புட்லுார்- அரண்வாயல் சாலை சேதம் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

புட்லுார்- அரண்வாயல் சாலை சேதம் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு


ADDED : செப் 15, 2024 01:19 AM

Google News

ADDED : செப் 15, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:புட்லுாரில் இருந்து அரண்வாயல் செல்லும் சாலை முழுதும், குண்டும், குழியுமாக சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை-பூந்தமல்லி சாலையில் அரண்வாயல் கிராமம் உள்ளது. இங்கிருந்து, புட்லுார் வழியாக, திருவள்ளூர்-ஆவடி சாலையை இணைக்கும் வகையில், 6 கி.மீட்டர் துாரத்தில் சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக, தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

புட்லுார் ரயில் நிலையம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், காக்களூர் தொழிற்பேட்டைக்கு, பக்தர்கள், தொழிலாளர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

அரண்வாயலில் இருந்து 6 கி.மீட்டர் துாரம் உள்ள இச்சாலை முழுதும், தார் பெயர்ந்து, ஆங்காங்கே, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சில இடங்களில், கடந்த மாதம் பெய்த மழையால், சாலையில் அரிப்பு ஏற்பட்டு, தார், ஜல்லி பெயர்ந்து, பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதன் காரணமாக இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் வாகன ஓட்டிகள், சாலை பள்ளத்தில், கீழே விழுந்து, காயமடைய நேரிடுகிறது.

எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரடியாக இச்சாலையில் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக பாதிப்பை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us