ADDED : செப் 04, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் முட்புதர்கள் நிறைந்த காலி நிலம் உள்ளது. இங்கு, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கார்த்திகேயன், 32, என்பது தெரிய வந்தது.
குடிபோதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.