/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி நுழைவாயில் துாண் சீரமைப்பு
/
அரசு பள்ளி நுழைவாயில் துாண் சீரமைப்பு
ADDED : மே 31, 2024 02:40 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளி.
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையோரம் உள்ள இந்த பள்ளியில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் பள்ளிக்கு வரும் நுழைவாயில் பகுதியில் இரு துாண்கள் உள்ளன. இதில் நுழை வாயில் பகுதியில் இடதுபுறம் உள்ள துாண் மேல்பகுதியில் சேதமடைந்துள்ளது. இதனால் மாணவ, மாணவியர் கடும் அச்சத்துடன் சென்று வருவதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் சேதமடைந்த பள்ளி நுழைவாயில் துாணை சீரமைத்தனர்.