sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையோர புதர்கள் அகற்ற கோரிக்கை

/

சாலையோர புதர்கள் அகற்ற கோரிக்கை

சாலையோர புதர்கள் அகற்ற கோரிக்கை

சாலையோர புதர்கள் அகற்ற கோரிக்கை


ADDED : செப் 09, 2024 06:56 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து ஏரிக்கரை வழியாக பொதட்டூர்பேட்டைக்கு தார் சாலை வசதி உள்ளது. நெடுஞ்சாலையான இந்த மார்க்கத்தில் தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த நெசவாளர்கள், வியாபாரிகள், பகுதிவாசிகள் இந்த வழியாக பயணிக்கின்றனர்.

பொதட்டூருக்கு செல்ல இந்த வழி குறுக்கு பாதையாக அமைந்துள்ளது. இந்த வழியை தவிர்த்து பள்ளிப்பட்டு கூட்டு சாலை வழியாக பயணித்தால், 5 கி.மீ., துாரம் சுற்றுப்பாதையாக அமையும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் புதர் மண்டிக்கிடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆறு அடி உயரம் வரை செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், எதிரில் வரும் வாகனங்களை கவனிக்க முடியவில்லை.

ஏரி, குளங்கள், வயல்வெளிக்கு இடையே இந்த சாலை அமைந்துள்ளதால் ஏராளமான சாலை வளைவுகள் உள்ளன. இந்நிலையில் புதரும் சீரமைக்கப்படாமல் கிடப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது. சாலையோர புதர்களை அகற்ற வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us