sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுவாபுரி முருகன் கோவிலில் தரிசன நேரத்தில் கட்டுப்பாடு

/

சிறுவாபுரி முருகன் கோவிலில் தரிசன நேரத்தில் கட்டுப்பாடு

சிறுவாபுரி முருகன் கோவிலில் தரிசன நேரத்தில் கட்டுப்பாடு

சிறுவாபுரி முருகன் கோவிலில் தரிசன நேரத்தில் கட்டுப்பாடு


ADDED : ஆக 01, 2024 12:19 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில், செவ்வாய்க்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.

இதனால், இரவு 8:30 மணிக்கு நடை அடைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கட்டுக்கு அடங்காத பக்தர்கள் கூட்டத்தால், சுவாமி தரிசனம் முடிந்து நடை அடைக்க, இரவு 11:30 மணி வரை ஆகிறது.

போலீஸ் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், சின்னம்பேடு கிராமத்தில், இரவு நேரத்தில் மர்மநபர்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என, கிராம மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இனிவரும் செவ்வாய்க்கிழமைகளில் வழக்கம் போல் அதிகாலை 4:15 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 8:30 மணிக்கு பக்தர்கள் செல்லும் அனைத்து தரிசன நுழைவாயில்களும் அடைக்கப்படும்.

அப்போது, வரிசையில் நிற்பவர்கள் தரிசனம் செய்து முடித்ததும் நடை அடைக்கப்படும் என, கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us