/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீருடன் கழிவுநீர் கலப்பால் சாலை மறியல்
/
குடிநீருடன் கழிவுநீர் கலப்பால் சாலை மறியல்
ADDED : ஜூலை 12, 2024 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, ஆறாவது வார்டுக்கு உட்பட்ட ஒரு பகுதியில், 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக மேற்கண்ட பகுதியில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பகுதிவாசிகள் புகார் தெரிவித்தனர்.
நடவடிக்கை ஏதும் எடுக்கப்படா நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் அவர்களிடம் உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து சீரமைப்பு பணிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.