sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆண்டார்மடம் வளைவுப்பகுதியில் விபத்து தவிர்க்க சாலை விரிவாக்கம்

/

ஆண்டார்மடம் வளைவுப்பகுதியில் விபத்து தவிர்க்க சாலை விரிவாக்கம்

ஆண்டார்மடம் வளைவுப்பகுதியில் விபத்து தவிர்க்க சாலை விரிவாக்கம்

ஆண்டார்மடம் வளைவுப்பகுதியில் விபத்து தவிர்க்க சாலை விரிவாக்கம்


ADDED : மே 05, 2024 11:12 PM

Google News

ADDED : மே 05, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: பொன்னேரி - பழவேற்காடு நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டார்மடம் பகுதியில், மூன்று இடங்களில் சாலை வளைவாக அமைந்து உள்ளது.

வேகமாக செல்லும் வாகனங்கள் வளைவுகளில் திரும்பும்போது விபத்துக்களில் சிக்குகின்றன. வளைவுப்பகுதிகளில், காவல்துறையினர், இரும்பு டிரம்களில் மண்நிரப்பி, மீடியன் போன்று, வரிசையாக வைத்து எச்சரிக்கை செய்து உள்ளனர்.

அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள், இரும்பு டிரம்களை சேதப்படுத்தி விடுகின்றன.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 60 லட்சம் ரூபாய் செலவில் ஆண்டார்மடம் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது. தற்போது மாநில நெடுஞ்சாலை, 7 மீ. அகலத்தில் உள்ளது. கூடுதலாக 7 மீ. அகலத்திற்கு, 300மீ. நீளத்திற்கு சாலை விரிவாக்கம் மேற்கொள்ளும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

சாலை ஓரங்களில் இருந்த, கருவேல மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, மண் கொட்டி சமன்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us