/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓடும் லாரி தீப்பற்றி எரிந்து நாசம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு
/
ஓடும் லாரி தீப்பற்றி எரிந்து நாசம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு
ஓடும் லாரி தீப்பற்றி எரிந்து நாசம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு
ஓடும் லாரி தீப்பற்றி எரிந்து நாசம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு
ADDED : மே 05, 2024 11:11 PM

கும்மிடிப்பூண்டி: சென்னை துறைமுகத்தில் இருந்து இரும்பு தாதுக்களை ஏற்றிக்கொண்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை நோக்கி நேற்று மாலை, டிரைலர் லாரி ஒன்று சென்றது. திருநெல்வேலியை சேர்ந்த கணேசன், 58, என்பவர் லாரியை ஓட்டி சென்றார்.
சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் கவரைப்பேட்டை அடுத்த சிறுவாபுரி சந்திப்பு அருகே லாரியின் இடதுபுற டயர் ஒன்று வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு இணைப்பு சாலையோரம் நின்றது.
அப்போது, லாரியின் டீசல் டேங்கில் உடைப்பு ஏற்பட்டு தீப்பற்றியது. அடுத்த சில நிமிடங்களில் லாரி முழுதும் தீப்பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. லாரியும், அதில் இருந்த இரும்பு தாதுக்களும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். லாரி டிரைவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். தேசிய நெடுஞ்சாலையில், ஓடும் லாரி தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.