/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் இன்று சங்காபிஷேகம்
/
திருத்தணி முருகன் கோவிலில் இன்று சங்காபிஷேகம்
ADDED : பிப் 25, 2025 07:51 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், மஹா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று, இரவு 9:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து உற்சவர் மண்டபத்தில், 1,008 சங்காபிஷேகம் வைத்து பூஜைகள நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 5:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை மூன்று கால அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் 1,008 சங்காபிஷேகத்திற்கு பூஜை நடைபெறும்.
இரவு 11:00 மணிக்கு மூலவருக்கு நான்காம் கால சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடைபெறும்.
நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சிவராத்திரியை முன்னிட்டு, இன்று இரவு முழுதும் கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

