sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருகன் கோவிலில் இன்று சங்காபிஷேகம்

/

திருத்தணி முருகன் கோவிலில் இன்று சங்காபிஷேகம்

திருத்தணி முருகன் கோவிலில் இன்று சங்காபிஷேகம்

திருத்தணி முருகன் கோவிலில் இன்று சங்காபிஷேகம்


ADDED : பிப் 25, 2025 07:51 PM

Google News

ADDED : பிப் 25, 2025 07:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், மஹா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று, இரவு 9:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து உற்சவர் மண்டபத்தில், 1,008 சங்காபிஷேகம் வைத்து பூஜைகள நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 5:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை மூன்று கால அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் 1,008 சங்காபிஷேகத்திற்கு பூஜை நடைபெறும்.

இரவு 11:00 மணிக்கு மூலவருக்கு நான்காம் கால சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடைபெறும்.

நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

சிவராத்திரியை முன்னிட்டு, இன்று இரவு முழுதும் கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.






      Dinamalar
      Follow us