ADDED : ஆக 19, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியே மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை போலீசார் செங்கரை கிராமம் அருகே, தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியே வந்த மூன்று லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி ஏதுமின்றி ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கிராவல் மணல் எடுத்து வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் மூன்று லாரிகளை பறிமுதல் செய்து, அழிஞ்சிவாக்கம் வசந்த்குமார், 25, தேவா, 27 ஆகிய இரண்டு ஓட்டுனர்களை கைது செய்தனர். மற்றொரு ஓட்டுனர் தப்பி ஓடினார். கைது செய்யப்பட்ட இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.