/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திடக்கழிவு திட்டம் 'அம்போ' புகை சூழ்ந்த நெடுஞ்சாலை
/
திடக்கழிவு திட்டம் 'அம்போ' புகை சூழ்ந்த நெடுஞ்சாலை
திடக்கழிவு திட்டம் 'அம்போ' புகை சூழ்ந்த நெடுஞ்சாலை
திடக்கழிவு திட்டம் 'அம்போ' புகை சூழ்ந்த நெடுஞ்சாலை
ADDED : ஏப் 17, 2024 12:15 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது தொடுகாடு ஊராட்சி.இப்பகுதியில் உள்ள திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து என, தினமும் 10,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சிக்குட்பட்ட பராசங்குபுரம் பகுதியில், நெடுஞ்சாலையோரம் சேகரமாகும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் எரித்து வருகின்றனர்.
இதனால் ஏற்படும் புகையால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருவதோடு, சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் குப்பை கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

