ADDED : ஏப் 28, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், சீத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் திருமாவளவன், 28. நேற்று முன்தினம் மாலை நடந்து சென்ற இவர் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கம் இருந்தவர்கள் கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

