/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓடைக்கால்வாயில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
/
ஓடைக்கால்வாயில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
ADDED : ஆக 02, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி தாலுகா சூரிய நகரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் கண்ணையன் மகன் ஹேமந்த், 2. இவன் நேற்று காலை 10:00 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.
அப்போது அருகே இருந்த ஓடைக்கால்வாயில் தவறி விழுந்தான். இதில் பலத்த காயமடைந்த ஹேமந்தை மீட்ட உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிசோதித்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தார்.