ADDED : செப் 16, 2024 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா குன்னத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னாரங்கம், 54.
இவர் கடந்த 14ம் தேதி மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமையல் வேலைக்கு வந்தார்.
அன்று மாலை அப்பகுதியில் உள்ள அலீஸ் சூப்பர் மார்க்கெட் அருகே உட்கார்ந்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார்.
தகவலறிந்த மணவாளநகர் போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.