sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறு மழைக்கே நிரம்பும் பெரிய ஏரி துார்வார மாநெல்லுார் விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

சிறு மழைக்கே நிரம்பும் பெரிய ஏரி துார்வார மாநெல்லுார் விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிறு மழைக்கே நிரம்பும் பெரிய ஏரி துார்வார மாநெல்லுார் விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிறு மழைக்கே நிரம்பும் பெரிய ஏரி துார்வார மாநெல்லுார் விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : மே 07, 2024 06:35 AM

Google News

ADDED : மே 07, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: மழைக்காலங்களில், ஆந்திர மாநிலம் சத்தியவேடு காடுகளில் இருந்து வரும் மழைநீர், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தமிழக எல்லைக்கு உட்பட்ட மாநெல்லுார் பெரிய ஏரியை வந்தடைகிறது.

அதன்பின், எளாவூர் ஏழு கண் பாலம் வழியாக, 9 கிலோமீட்டர் கால்வாயை கடந்து கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டு மழைக்காலங்களில், வினாடிக்கு 753 கனஅடி நீர், இதுபோன்று வீணாக கடலில் கலப்பதாக நீர்வளத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள மிக பெரிய ஏரிகளில் ஒன்றான மாநெல்லுார் ஏரி, 296 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த ஏரியின் நீர் பாசனத்தை நம்பி, 495 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வரை, தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்தால் மட்டுமே ஏரி நிரம்பி வழிந்து, கால்வாய் வழியாக கடலில் கலக்கும்.

ஆனால், 10 ஆண்டுகளாக இரு நாட்கள் மழை பெய்தால் கூட, ஏரி நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.

நீர்வளத் துறையின் முறையான பராமரிப்பின்றி ஏரியின் பல பகுதிகள் துார்ந்து போய் மணல் திட்டுகள் போல் காட்சியளிக்கின்றன. இதனால், கோடை காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஏரியை அகலப்படுத்தி, துார் வாரி கரையை பலப்படுத்தி, முறையாக பராமரித்தால், மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகாமல் சேமிக்க முடியும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us