sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மூதாட்டியிடம் செயின் பறித்தவர் இரண்டு மாதங்களுக்கு பின் கைது

/

மூதாட்டியிடம் செயின் பறித்தவர் இரண்டு மாதங்களுக்கு பின் கைது

மூதாட்டியிடம் செயின் பறித்தவர் இரண்டு மாதங்களுக்கு பின் கைது

மூதாட்டியிடம் செயின் பறித்தவர் இரண்டு மாதங்களுக்கு பின் கைது


ADDED : மே 02, 2024 08:07 PM

Google News

ADDED : மே 02, 2024 08:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ஆந்திர மாநிலம், விஜயவாடா ராஜிவ் நகரை சேர்ந்தவர் சுசிலா, 64; இவரது மகன் பவுன் குமார், 43. இருவரும் மார்ச் 27-ம் தேதி அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயிலில் சென்றனர்.

ரயில் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டதும் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் சுசிலா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றார்.

இது குறித்து பவன்குமார் அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் நடைமேடைகளில் இன்ஸ்பெக்டர் வடிவுகரசி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நடைமேடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் சென்னை ஆவடி காமராஜ் நகரை சேர்ந்த ராஜேந்திரன், 47, என்பதும் அரக்கோணம் புறநகர் ரயிலில் சென்ற சுசிலாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து 3 சவரன் செயினை பறிமுதல் செய்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us