/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணிடம் செயின் பறித்தவருக்கு வலை
/
பெண்ணிடம் செயின் பறித்தவருக்கு வலை
ADDED : ஆக 12, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரி, 42. நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு வீட்டின் வெளியே வாசலை பெருக்கி கொண்டு இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் குடிக்க தண்ணீர் கேட்டார். தண்ணீர் எடுக்க வீட்டிற்கு திரும்பியபோது, மர்ம நபர்,கவுரி அணிந்திருந்த இரண்டு சவரன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து கவுரி, பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்படி போலீசார் வழக்குப் பதிந்து செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

