ADDED : ஏப் 28, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம், 49.
இவர் தன் வீட்டின் அருகே கிறிஸ்துவ தேவாலயம் நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது மனைவி சாந்திக்கும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் மனைவி சாந்தி மகன் ஷியாம் ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷியாம் மற்றும் சாந்தி ஆகியோர் நித்தியானந்தனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த ஷியாம் நித்தியானந்தத்தை அரிவாளால் வெட்டியதில் அவரது தலை, காது, கைகளில் வெட்டு விழுந்துள்ளது.
காயமடைந்தவரை அருகில் உள்ளவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். கடம்பத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

