/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மரத்தில் இருந்து விழுந்தவர் பலி
/
மரத்தில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : ஏப் 10, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு, 25. ஐந்து மாதங்களுக்கு முன், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் கிராமத்தில் தங்கி, அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார்.
கடந்த, 7ம் தேதி சின்ராசு அங்குள்ள பனை மரத்தில் ஏறினார். இதில் கால் தவறி கீழே விழுந்தார். பலத்த காயங்களுடன் அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று இறந்தார். பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

