sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுற்றுச்சுவர் அமைத்தும் பயனில்லை மாணவர்களின் பெற்றோர் வேதனை

/

சுற்றுச்சுவர் அமைத்தும் பயனில்லை மாணவர்களின் பெற்றோர் வேதனை

சுற்றுச்சுவர் அமைத்தும் பயனில்லை மாணவர்களின் பெற்றோர் வேதனை

சுற்றுச்சுவர் அமைத்தும் பயனில்லை மாணவர்களின் பெற்றோர் வேதனை


ADDED : ஜூன் 02, 2024 12:23 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டூர்:பூண்டி ஒன்றியம் பட்டரைப்பெரும்புதுார் ஊராட்சிக்கு உட்பட்டது, வரதாபுரம் கிராமம். இங்கு, திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில் அரசு துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பள்ளி என்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 200 மீட்டருக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.

இந்த சுற்றுச்சுவர் பள்ளியை சுற்றி அமைக்காமல், ஒருபக்கம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும், பள்ளி வளாகத்திற்குள் நாய், பன்றி, கால்நடைகள் உள்ளே சுற்றித் திரிகின்றன. இதனால், சுற்றுச்சுவர் அமைத்தும் பயனில்லை. இதனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது என, பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி முழுதும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us