sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் புதரில் மாயமாகி வரும் அவலம்

/

பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் புதரில் மாயமாகி வரும் அவலம்

பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் புதரில் மாயமாகி வரும் அவலம்

பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் புதரில் மாயமாகி வரும் அவலம்


ADDED : மார் 07, 2025 02:08 AM

Google News

ADDED : மார் 07, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நுங்கம்பாக்கம்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, நுங்கம்பாக்கம் ஊராட்சி. இங்கு, 15 ஆண்டுகளுக்கு முன், மப்பேடு செல்லும் சாலையில், ஏரிக்கரை அருகே, 2004 --- 05ம் ஆண்டு கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை, இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்தினர்.

இந்நிலையில், பராமரிப்பில்லாமல் பூட்டிக் கிடந்த மகளிர் சுகாதார வளாகத்தை ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, 2019 -- 20ம் ஆண்டு, பொது நிதியின் கீழ், 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.

மேலும், குப்பை கொட்டும் இடமாக மாறி, புதர் மண்டி வீணாகி வருவது அப்பகுதி பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us