/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
2 ஆண்டாக பள்ளி கட்டட பணி இழுபறி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
/
2 ஆண்டாக பள்ளி கட்டட பணி இழுபறி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
2 ஆண்டாக பள்ளி கட்டட பணி இழுபறி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
2 ஆண்டாக பள்ளி கட்டட பணி இழுபறி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜூலை 04, 2024 01:14 AM

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 35 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் வகுப்பறை கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
துவக்கப்பள்ளி கட்டடம் முழுமையாக சேதமடைந்து உள்ளது. கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுகின்றன. துாண்களும் பலவீனமாக இருப்பதால், கட்டடத்தின் உறுதித்தன்மை முற்றிலும் பாதித்துள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, கடந்த 2022ம் ஆண்டு சி.எஸ்.ஆர்., திட்டத்தில், 18.90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதே பகுதியில் உள்ள அரசு நிலத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
புதிய இடத்தில் அரசு பள்ளி கட்டடம் கட்டுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இரண்டு ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
அனுப்பம்பட்டு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் துவக்கப்பள்ளி செயல்படுகிறது. அரசு உயர்நிலைப் பள்ளியில், 380 மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், இங்குள்ள மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை.
இதனால், மாணவர்கள் தங்களது விளையாட்டு திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது.
காலை நேரங்களில், மாணவர்கள் இறை வணக்கம் செய்வதற்கும் போதிய இடவசதி இல்லாமல் தவிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு பாழடைந்த துவக்கப்பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதேசமயம், துவக்கப் பள்ளிக்கு அருகில் உள்ள அரசு நிலத்தில் கட்டடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பணிகள் துவக்கப்படாமல் உள்ளது.
இதனால், துவக்கப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதுடன், தினமும் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால், அசம்பாவிதம் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.