நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வி.கே.ஆர்.புரம் பகுதியில் மதுபாட்டில்கள் வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.பி.,ஸ்ரீநிவாசாபெருமாள் உத்தரவின் பேரில் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று மேற்கண்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, வி.கே.ஆர்.புரம் காலனி சேர்ந்த சந்திரன் மனைவி சுமதி, 33 என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து, சுமதியை போலீசார் கைது செய்தனர்.