sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு பள்ளியில் கழிப்பறை கட்டடம் இருக்கு... உள்ளே இருந்து பொருட்கள் ‛டமால்'...?

/

அரசு பள்ளியில் கழிப்பறை கட்டடம் இருக்கு... உள்ளே இருந்து பொருட்கள் ‛டமால்'...?

அரசு பள்ளியில் கழிப்பறை கட்டடம் இருக்கு... உள்ளே இருந்து பொருட்கள் ‛டமால்'...?

அரசு பள்ளியில் கழிப்பறை கட்டடம் இருக்கு... உள்ளே இருந்து பொருட்கள் ‛டமால்'...?


ADDED : ஜூன் 05, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை, தொம்பரம்பேடு, தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், போந்தவாக்கம், கச்சூர், சீத்தஞ்சேரி, பிளேஸ்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு, மாணவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லாததால், மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதற்காக, நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ், 2022 - -23ம் ஆண்டு 6.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டப்பட்டது.

ஆனால், கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் முன் கழிப்பறை சேதமடைந்தது. புதிதாக கட்டப்படட கழிப்பறையின் இரும்பு குழாய், சிறுநீர் கழிக்கும் இடம், மலம் கழிக்கும் இடம், தண்ணீர் வரும் குழாய் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

இது, சமூக விரோதிகள் செயலா அல்லது மாணவர்கள் யாராவது இந்த வன்முறையில் ஈடுபட்டார்களா என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த கழிப்பறை சேதமடைந்த பல மாதங்கள் ஆன நிலையில், தற்போது வரை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், வகுப்பறை, கழிப்பறை, பள்ளி வளாகம் ஆகியவற்றை சீரமைத்து துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்த கழிப்பறையை சீரமைக்காமல் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, பள்ளி திறக்க ஒரு வாரமே உள்ள நிலையில், சேதமடைந்த மாணவர்கள் கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us