/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓடையை கடக்க பாலம் இல்லை பாலாபுரத்தில் தொடரும் அவதி
/
ஓடையை கடக்க பாலம் இல்லை பாலாபுரத்தில் தொடரும் அவதி
ஓடையை கடக்க பாலம் இல்லை பாலாபுரத்தில் தொடரும் அவதி
ஓடையை கடக்க பாலம் இல்லை பாலாபுரத்தில் தொடரும் அவதி
ADDED : ஜூலை 15, 2024 11:00 PM
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தில், 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தினர், பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள வயல்வெளிக்கு செல்லும் வழியில் பாயும் ஓடையை கடந்து சென்று வருகின்றனர்.
பாலாபுரம் கிழக்கில் தாமனேரி செல்லும் சாலையில் ஓடையை கடக்க பாலம் உள்ளது. மேற்கில் வீரமங்கலம் செல்லும் சாலையில் ஓடையை கடக்க பாலம் கட்டப்படவில்லை.
இதனால், ஓடையில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டரில் செல்பவர்கள், 1 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு மகன்காளிகாபுரம் வழியாக மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த ஓடையை ஒட்டி அமைந்துள்ள கால்நடை மருந்தகத்திற்கு கால்நடைகளை சிகிச்சைக்காக ஓட்டிவரும் விவசாயிகளும், பாலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வீரமங்கலத்தில் இருந்து வரும் மாணவர்களும், ஓடையை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, இந்த ஓடைக்கு குறுக்கே பாலம் கட்டப்பட வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

