/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனல் மின்சாரம் 1,040 மெகா வாட் உற்பத்தி பாதிப்பு
/
அனல் மின்சாரம் 1,040 மெகா வாட் உற்பத்தி பாதிப்பு
ADDED : மே 08, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில், மின் வாரியத்திற்கு சொந்தமான வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது.
அங்கு தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, சென்னை மற்றும் புறநகரின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தின் இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் மாலை, முதல் அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இதே பிரச்னையால், துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உடைய இரு அலகுகளில், நேற்று முன்தினம் இரவு முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

