/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
/
சோழபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : மே 18, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அருள்பாலித்து வருகிறார் கனககுசாம்பாள் உடனுறை சோழபுரீஸ்வரர் சுவாமி. இங்கு வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
நேற்று காலை கேடய உற்சவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சோழபுரீஸ்வரர், கனககுசாம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.
முன்னதாக, பக்தர்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மணக்கோலத்தில் உற்சவர் புறப்பாடு நடந்தது.

