sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

/

திருத்தணி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திருத்தணி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திருத்தணி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


ADDED : ஜூன் 24, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில், இளங்கலை பட்டப்படிப்பு பி.எஸ்.சி., பி.காம் பொது, பி.ஏ., பி.சி.ஏ., போன்ற படிப்புகளில் ஆண்டுக்கு, 676 மாணவ - -மாணவியர் புதியதாக சேர்க்கப்படுவர்.

நடப்பாண்டில் அரசு கல்லுாரியில் சேர்வதற்கு மாணவர்கள் ஆன்-லைன் மூலம் 6,002 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த, 11ம் தேதி துவங்கி, 18 ம் தேதி வரை நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள காலியிடங்களுக்கு, 2வது கட்ட கலந்தாய்வு, இன்று துவங்கி, 26ம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று, 24ம் தேதி வணிகவியல், பி.காம் பொது, பி.பி.ஏ., பாடப்பிரிவுகளில், கட்ஆப் மதிப்பெண்கள், 274 முதல், 160 வரையும் நாளை பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.சி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளில், கட்ஆப் மதிப்பெண்கள், 274 முதல், 200 வரையும், நாளை மறுநாள், 26ம் தேதி, பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில், கட்ஆப் மதிப்பெண்கள், 274 முதல் 171 வரையும், பி.ஏ., வரலாறு, பொருளியியல் ஆகிய பாடப்பிரிவுகளில், கட்ஆப் மதிப்பெண்கள், 199 முதல் 140 வரை உள்ள மாணவர்கள் கலந்தாய்வு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

மேலும், தகவல் அறிய மாணவர்கள் கல்லுாரி இணைய தளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம் என கல்லுாரி முதல் பூரணசந்திரன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us