/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விதிமீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
/
விதிமீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
ADDED : மார் 09, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு, திருத்தணி உட்கோட்டத்தில் சரக்கு வாகனங்களை, நடமாடும் வியாபார கடைகளாக சிலர் மாற்றி வடிமைத்து இயக்குகின்றனர்.
பொதட்டூர்பேட்டை மற்றும் அத்திமாஞ்சேரிபேட்டை கிராமங்களில், இந்த வாகனங்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி, போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் நிறுத்தி வைத்து வியாபாரத்தில் சிலர் ஈடுபடுகின்றனர்.
இதனால், கடும் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.