ADDED : ஆக 16, 2024 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் அரசு மதுக்கடை இயங்காத நேரத்தில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுப்பேட்டை மோகன்பாபு, 24, என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம், 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே எம்.என்.கண்டிகை கிராமத்தில், கூடுதல் விலைக்கு மதுவிற்றுக்கொண்டிருந்த லதா, 44, என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம், 18 மது பாட்டில்கள், நான்கு பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.