sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஓபசமுத்திரம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்

/

ஓபசமுத்திரம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஓபசமுத்திரம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஓபசமுத்திரம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்


ADDED : மே 01, 2024 10:07 PM

Google News

ADDED : மே 01, 2024 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ளது, ஓபசமுத்திரம் கிராமம். பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள பகுதி என்பதால், நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கும்.

அதனால், நத்தம் கிராமத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக ஓபசமுத்திரம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஓபசமுத்திரம் ஊராட்சியில் மோட்டார் பழுதானதால், கடந்த மூன்று நாட்களாக சீரான குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை அங்குள்ள பிள்ளையார் கோவில் எதிரே சுண்ணாம்புகுளம் -- கள்ளூர் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆரம்பாக்கம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர்.

உடனடியாக தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக போலீசாரிடம், ஊராட்சி நிர்வாகம் உறுதி அளித்தது. அதன்பின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us