sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நடுவில் கொஞ்சம் சாலையை காணோம் மருதவல்லிபுரம் மக்கள் குமுறல்

/

நடுவில் கொஞ்சம் சாலையை காணோம் மருதவல்லிபுரம் மக்கள் குமுறல்

நடுவில் கொஞ்சம் சாலையை காணோம் மருதவல்லிபுரம் மக்கள் குமுறல்

நடுவில் கொஞ்சம் சாலையை காணோம் மருதவல்லிபுரம் மக்கள் குமுறல்


ADDED : ஆக 18, 2024 01:36 AM

Google News

ADDED : ஆக 18, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது மருதவல்லிபுரம் கிராமம். இங்கு 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மருதவல்லிபுரம்-- -மணவூர் தார்ச்சாலை, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இச்சாலை, 3 ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது.

எனவே இந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கிராமசாலைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் 2 கி.மீ., நீளத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு பணி துவங்கி இரண்டு மாதங்களுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் மருதவல்லிபுரம் தாமரை குட்டை அருகே தார்ச்சாலை 20 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படாமல் விடப்பட்டு உள்ளது. இதனால் நடுவில் கொஞ்சம் சாலையை காணோம் என பகுதிவாசிகள் குமுறுகின்றனர்.

திருவள்ளூர் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us