sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புதர்மண்டிய நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் எப்போது?

/

புதர்மண்டிய நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் எப்போது?

புதர்மண்டிய நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் எப்போது?

புதர்மண்டிய நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் எப்போது?


ADDED : மே 01, 2024 01:26 AM

Google News

ADDED : மே 01, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:ஆந்திர மாநிலத்தில் உருவாகும் கொசஸ்தலையாற்று நீர், தமிழகத்தின் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியத்தை கடந்து, பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது.

திருவாலங்காடு ஒன்றியம் ஓரத்துார் கொசஸ்தலையாற்றில் இருந்து மருதவல்லிபுரம் வழியாக, மணவூர் ஏரிக்கு செல்ல நீர்வரத்து கால்வாய் உள்ளது.

பொதுப்பணித் துறையின் கீழ் வரும் இந்த கால்வாய், 3 கி.மீ., நீளமும், 3-10 மீட்டர் அகலமும் உடையது. இந்த கால்வாய் 10 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி உள்ளதால், ஆங்காங்கே துார்ந்தும், புதர்மண்டியும் காணப்படுகிறது.

தற்போது ஓரத்தூர் பகுதியில் சேகரமாகும் கழிவுநீரும், இந்த கால்வாயில் விடப்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

இந்நிலையில், கால்வாய் ஆங்காங்கே தூர்ந்துள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் ஏரிக்கு நீர் செல்வதில்லை.

இதனால், விவசாயிகள் மூன்றாம் போகத்தில் நீரின்றி சிரமப்படுகின்றனர். இந்த நீர்வரத்து கால்வாயை மீட்டு, துார்வாரி சீரமைப்பதன் வாயிலாக, 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

எனவே, இந்த நீர்வரத்து கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us