/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் பொலிவிழந்த பூங்கா புத்துயிர் பெறுவது எப்போது?
/
கும்மிடியில் பொலிவிழந்த பூங்கா புத்துயிர் பெறுவது எப்போது?
கும்மிடியில் பொலிவிழந்த பூங்கா புத்துயிர் பெறுவது எப்போது?
கும்மிடியில் பொலிவிழந்த பூங்கா புத்துயிர் பெறுவது எப்போது?
ADDED : ஆக 16, 2024 12:32 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட என்.எம்.எஸ்., நகரில், கடந்த 2013ம் ஆண்டு, நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் பூங்கா மற்றும் சிறுவர் விளையாடி மகிழ ஊஞ்சல், ராட்டினம், சறுக்கு மரம் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் பொழுதுபோக்கும் முக்கிய இடமாக இருந்து வந்தது. சில ஆண்டுகளாக, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், பூங்காவை முறையாக பராமரிக்கவில்லை.
இதன் காரணமாக, பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, செடி, கொடிகள் வளர்ந்து, நடைபாதை சுற்றி புதர்கள் சூழ்ந்து, சிமென்ட் இருக்கைகள் உடைந்துள்ளன.
எனவே, பொலிவிழந்த பூங்காவிற்கு, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் புத்துயிர் அளிக்க வேண்டும். அழகான செடி, கொடிகள் வளர்த்து, சிறுவர் - சிறுமியர் விளையாடி மகிழ, புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

