sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பூந்தமல்லி கிளை நுாலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?

/

பூந்தமல்லி கிளை நுாலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?

பூந்தமல்லி கிளை நுாலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?

பூந்தமல்லி கிளை நுாலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?


ADDED : ஆக 25, 2024 11:02 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி: பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் அருகே, பொது நுாலகத் துறை கட்டுப்பாட்டில் கிளை நுாலகம் இயங்குகிறது. இங்கு, 8,000 உறுப்பினர்கள், 7,600 புத்தகங்கள் உள்ளன.

தினசரி நாளிதழ்களை படிக்க 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகின்றனர்.அரசு தேர்வுக்கு தயாராகும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்த நுாலகத்தில் புத்தகங்களை படித்து பயனடைந்து வருகின்றனர்.

தரைத்தளத்தில் நாளிதழ் படிக்கும் இடமும், மேல் தளத்தில் புத்தகங்கள், கணினிகளும் உள்ளன. வாசகர்கள் அதிகம் பேர் வந்து செல்லும் நிலையில், போதுமான இடவசதி இல்லை. இதனால், இடநெருக்கடியால் அவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

வாசகர்கள் கூறியதாவது:

பூந்தமல்லி நுாலகம் 2012ல் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்குகிறது. இங்கு போதிய இடவசதி இல்லை.

நுாலகத்தை ஒட்டி அரசுக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இந்த இடம் தனியார் வாகனம் நிறுத்தும் இடமாக உள்ளது. அங்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us