/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணறு மூடப்படுமா?
/
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணறு மூடப்படுமா?
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணறு மூடப்படுமா?
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணறு மூடப்படுமா?
ADDED : ஆக 21, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சி சக்கரமநல்லூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியருகே பாழடைந்த கிணறு திறந்த நிலையில் உள்ளது.
இந்த கிணற்றின் அருகே பள்ளி செல்லும் மாணவர்கள் விளையாடுவதுடன் எட்டி பார்த்து செல்வதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். மாணவர்கள் அதில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே இந்த பாழடைந்த கிணற்றை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.