sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின் இணைப்புக்கு ரூ.1,000 லஞ்சம் வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு

/

மின் இணைப்புக்கு ரூ.1,000 லஞ்சம் வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு

மின் இணைப்புக்கு ரூ.1,000 லஞ்சம் வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு

மின் இணைப்புக்கு ரூ.1,000 லஞ்சம் வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு


ADDED : செப் 20, 2024 08:12 PM

Google News

ADDED : செப் 20, 2024 08:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த அண்ணனூர் சோழன் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 40.

இவர் 2014ல் தன் வீட்டிற்கு மும்முனை மின்சாரமாக மாற்றி தரக் கோரி ஆவடி தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.

அங்கு வணிக ஆய்வாளராக இருந்த சிவக்குமார், 53 என்பவர் ரூபாய் 1,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் சுரேஷ் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் அறிவுரைபடி, சுரேஷ் ரூ.1,000 வழங்கும்போது, சிவகுமார் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நேற்று நீதிபதி மோகன் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் சிவகுமாருக்கு மூன்றாண்டு தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.






      Dinamalar
      Follow us