/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீரஆஞ்சநேயர் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
/
வீரஆஞ்சநேயர் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
ADDED : நவ 24, 2025 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 9:00 மணிக்கு பெரிய தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு, காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயர் கோவில் வளாகத்திற்கு வந்தது.
பின், மூலவருக்கு பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

