ADDED : மார் 12, 2026 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி சுவால்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன் மகன் கணேஷ், 15. திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்த கணேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்து வந்த திருத்தணி போலீசார், மாணவனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

