sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கேசாவரம் அணைக்கட்டில் கூவம் ஆற்றுக்கு 115 கன அடி நீர் திறப்பு

/

கேசாவரம் அணைக்கட்டில் கூவம் ஆற்றுக்கு 115 கன அடி நீர் திறப்பு

கேசாவரம் அணைக்கட்டில் கூவம் ஆற்றுக்கு 115 கன அடி நீர் திறப்பு

கேசாவரம் அணைக்கட்டில் கூவம் ஆற்றுக்கு 115 கன அடி நீர் திறப்பு


ADDED : டிச 13, 2024 02:37 AM

Google News

ADDED : டிச 13, 2024 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என, இரு ஆறுகளாக பிரிகிறது.

கேசாவரம் அணைக்கட்டில் நீர் நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர், பூண்டி ஏரிக்கு செல்கிறது.

இந்த அணைக்கட்டின் இன்னொரு புறம் அமைக்கப்பட்ட, 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் மழைநீர்,கூவம் ஆறாக மாறி, பேரம்பாககம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னைக்கு செல்கிறது.

இந்த அணைக்கட்டில் பெஞ்சால் புயல் மற்றும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் தற்போது அணைக்கட்டில் மழைநீர் நிரம்பி 50 கன அடி நீர் வெளியேறி வருவதால் கொசஸதலை ஆற்றில் மழைநீர் வழிந்தோடுகிறது.

இதேபோல அணைக்கட்டின் மற்றொருபுறம் அமைக்கப்பட்டுள்ள 16 ஷட்டர்களில் 5 ஷட்டர்கள் மூலம் 115 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என நீர்வளத் ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us