sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வேன் கவிழ்ந்து விபத்து 12 தொழிலாளர்கள் காயம்

/

வேன் கவிழ்ந்து விபத்து 12 தொழிலாளர்கள் காயம்

வேன் கவிழ்ந்து விபத்து 12 தொழிலாளர்கள் காயம்

வேன் கவிழ்ந்து விபத்து 12 தொழிலாளர்கள் காயம்


ADDED : ஆக 30, 2025 12:12 AM

Google News

ADDED : ஆக 30, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையோரம் கவிழ்ந்ததில், எட்டு பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.

திருவள்ளூர் அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் பீர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு, திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வேன் மூலம் பணிக்கு வந்து செல்கின்றனர்.

நேற்று காலை, அடிக்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 12 பேர், தொழிற்சாலை வேனில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை திருநாவுக்கரசு, 40, என்பவர் ஓட்டினார்.

அடிக்கல்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிடுவதற்கு, ஓட்டுனர் சாலையோரம் நிறுத்திய போது, திடீரென வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், பயணம் செய்த எட்டு பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.

அப்பகுதி மக்கள் அனைவரையும் மீட்டு, கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், திருத்தணி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இதுகுறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us