/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
19ல் ரேஷன் தாரர் குறைதீர் முகாம்
/
19ல் ரேஷன் தாரர் குறைதீர் முகாம்
ADDED : அக் 11, 2024 02:07 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம், வரும் 19ல் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் வரும், 19ல் சனிக்கிழமை நடக்கிறது. அன்று காலை, அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10:00 மணி முதல் முகாம் நடக்கிறது.
முகாமில், பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
மேலும் முன்னுரிமை குடும்ப அட்டைகள், 'அந்த்யோதயா அன்ன யோஜனா' குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகையை தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பதிவு செய்து கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளார்.