/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2 டி.எம்.சி., நீர் இருப்பு
/
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2 டி.எம்.சி., நீர் இருப்பு
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2 டி.எம்.சி., நீர் இருப்பு
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2 டி.எம்.சி., நீர் இருப்பு
ADDED : ஜூன் 26, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் நடுவே, பூண்டி கிராமத்தில் சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் உள்ளது.
ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டிற்கு வினாடிக்கு, 433 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 3.2 டி.எம்.சி., யில், 2 டி.எம்.சி., நீர் உள்ளது. மொத்த நீர்மட்டம், 35 அடி. தற்போது, 31.38 அடி உள்ளது. கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 380 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.