/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
25ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
25ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : அக் 22, 2024 07:21 AM
திருவள்ளூர்: திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 25ல் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 25ல் 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் விற்பனைமற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, மின்வாரியம், வருவாய்.
பொதுப்பணி மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பான குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.