sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடி நீர் திறப்பு

/

செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடி நீர் திறப்பு


ADDED : அக் 04, 2024 08:25 PM

Google News

ADDED : அக் 04, 2024 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, பூண்டி சத்யமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு, 150 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது, மேலும் 100 கன அடி நீர் அதிகரிக்கப்பட்டு, 250 கன அடியாக உள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வாயிலாக, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு, வினாடிக்கு 340 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 150 கன அடி வீதம், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது, 100 கன அடி அதிகரிக்கப்பட்டு, 250 கன அடியாக உயர்த்தப்பட்டது.

நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர், 340 மற்றும் மழைநீர், 40 கன அடி என, மொத்தம் 380 கன அடி நீர் பூண்டிக்கு கொண்டிருக்கிறது.

மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், தற்போது, 0.194 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 35 அடி. தற்போது 19.33 அடியாக உள்ளது.






      Dinamalar
      Follow us