/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
27ல் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
/
27ல் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
ADDED : செப் 20, 2024 08:02 PM
திருவள்ளூர்:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 27ல் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 27 காலை 10:00 மணியளவில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.
கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு;
மீன்வளம், கூட்டுறவு, வங்கி, மின்வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
எனவே, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.