sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

3 கோவிலில் கும்பாபிஷேகம் திருத்தணியில் கோலாகலம்

/

3 கோவிலில் கும்பாபிஷேகம் திருத்தணியில் கோலாகலம்

3 கோவிலில் கும்பாபிஷேகம் திருத்தணியில் கோலாகலம்

3 கோவிலில் கும்பாபிஷேகம் திருத்தணியில் கோலாகலம்


ADDED : ஆக 30, 2025 12:22 AM

Google News

ADDED : ஆக 30, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலின் மூன்று உபகோவில்களில், நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

திருத்தணி முருகன் மலைக்கோவில் பகுதியில், செங்கழுநீர் விநாயகர், படவேட்டம்மன் மற்றும் ஏகாத்தம்மன் என, மூன்று கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள், முருகன் கோவிலின் உபகோவில்கள்.

மூன்று கோவில்களிலும் திருப்பணிகள் நடந்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் விழா துவங்கியது. அன்று காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் முதல்கால யாக சாலை பூஜை நடந்தன.

இதற்காக, மூன்று கோவில் வளாகத்திலும் யாகசாலை, 36 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. மேலும், மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை மற்றும் கலச ஊர்வலம் நடந்தது. காலை 8:00 மணிக்கு கோவில் விமானத்தின் புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.






      Dinamalar
      Follow us