/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவாபுரி முருகனை தரிசிக்க 3 மணி நேரம் காத்திருப்பு
/
சிறுவாபுரி முருகனை தரிசிக்க 3 மணி நேரம் காத்திருப்பு
சிறுவாபுரி முருகனை தரிசிக்க 3 மணி நேரம் காத்திருப்பு
சிறுவாபுரி முருகனை தரிசிக்க 3 மணி நேரம் காத்திருப்பு
ADDED : ஜன 07, 2026 06:45 AM

கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிப்பது வழக்கம்.
நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால், அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்தனர். இதனால், சிறுவாபுரி கோவில் அமைந்துள்ள பகுதி முழுதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால், மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை தரிசித்து சென்றனர்.
ஹிந்து அறநிலையத் துறையின் திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம் மேற்பார்வையில், செயல் அலுவலர் மாதவன் தலைமையிலான அத்துறையினர், கோவில் உட்புறத்திலும், ஆரணி போலீசார் கோவிலின் வெளிபுறத்திலும் பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்தினர்.

